06 நவம்பர் 2016

விகடன் தடம்–நவம்பர் 2016 இதழின் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

 

thadam_logo

6p1 - Copy

 

பழகுவதற்கு இனிமையான, கர்வமில்லாத, மனசுக்கு நெருக்கமான மதிப்பிற்குரிய படைப்பாளி திரு எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் நீண்ட பேட்டி இம்மாத (நவம்பர் 2016) தடம் இதழில் வந்துள்ளது.

......அந்தப் பழி என்னால் தீர்ந்தது என்று ஜெயகாந்தன் சொன்னதுபோல்,

இந்த ஒரு பேட்டியினால் இந்த இதழ் தடம் நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் பதில்கள் பல இடங்களில் மனதைத் தொட்டது. சிந்தையில் ஓடிக் கொண்டிருப்பவைகளைப் பிரதிபலித்ததாய் உணர முடிந்தது. அதை இத்தனை அழகாய்ச் சொல்ல ஒருவர் வேண்டுமே...!

-------------------------------------------------------------------------------

“இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் ஒரு குடிமகன் செல்ல, எந்தத் தடையும் இல்லை என்பதுதான் ஒரு பயணியாக நான் சந்தோஷப்படும் முக்கியமான விஷயம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சுதந்திரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பான பொது இடம் என ஒன்று இப்போது இல்லை. இரவு வாழ்க்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஓர் இடத்துக்குச் செல்ல முடிவத இல்லை. சந்தேகத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது”

“நான் மக்களை அவர்களின் மகிழ்ச்சியான வாழிடத்தில் சந்திக்க விரும்புகிறேன். பத்து முறைக்கும் மேலாக இலங்கையிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்திருக்கிறேன். மகிழ்ச்சியாகப் போய் வருவதற்கு இலங்கை இப்போது ஒரு சுற்றுலாத் தலம் இல்லை.“

”ஒரு படைப்பில் எது எழுத்தாளனின் நினைவு, எது கற்பனை எனப் பிரித்தறிய முடியாமல் இருப்பதுதான் ஒரு நல்ல படைப்புக்கான அடையாளம்”

“இன்றையவர்கள் இலக்கியத்தைப் பார்க்கும் பார்வை பார்வை மாறியிருக்கிறது. முந்தையவர்கள் தங்களைத் தனக்கு முன் எழுதியவர்களின் தொடர்ச்சி என்று நம்பினார்கள். ஆனால் இன்றையவர்களின் மனநிலை - எனக்கு முன்பும் யாரும் இல்லை, பின்பும் யாரும் இல்லை - நான்தான் ரைட்டர் - என்பதாக இருக்கிறது. இன்றையவர்கள் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. சமகாலத்தையும் படிப்பது இல்லை. கடந்த காலத்தையும் படிப்பது இல்லை. கான்ஷியசாக எழுதுகிறார்கள். பகுத்து ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு தெரிகிற இவர்களுக்கு தாங்கள் ஒரு தொடர்ச்சி என்பதோ, ஒரு பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதோ புரிவது இல்லை. எழுத்து என்பது ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி.”

“ரெஸ்பானிஸிபிலிட்டி என்பது சமூகம் சார்ந்ததாக இருக்கலாம். பண்பாடு சார்ந்ததாக இருக்கலாம். மனித அகத்தை ஆராய்வதுதான் முக்கியம் என்று சொல்லலாம்.எதுவாகவோ, எழுத்தாளனுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். பொறுப்பு உணர்வு அற்ற கலை என்று எதுவுமில்லை.“

------------------------------------------------------------------------------------

banner_1

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...