20 நவம்பர் 2014

சக்திஜோதியின் கவிதைத் தொகுப்பு “சொல் எனும் தானியம்”

2014-11-21 05.53.19 joithi-2

     

    படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் சக்தி ஜோதியின்”சொல் எனும் தானியம்“ கவிதைத் தொகுப்பு முக்கியமாகப் படுகிறது. இந்தத் தொகுதியின் கவிதைகளை ஆழப் புரிந்து அற்புதமாக ஒரு அணிந்துரை வழங்கியுள்ளவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.கவிதைகளைப் படிக்கும் முன்பும், படித்து முடித்த பின்பும் மீளவும் படித்து ரசிக்க வேண்டிய அணிந்துரை இது.
    தொகுப்பில் பல கவிதைகள் மனதை நெருடின என்பது நிஜம். இவர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள். அணிந்துரையின் அழகில் சொல்லப்படுவதுபோல், பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம். ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது என்பதும், ஒரு ரோஜாவைப் பாட வேண்டிய அவசியமில்லை, கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும் என்பதும், ஒரு மரத்தின் இலைகள் இயற்கையாக அரும்புவதுபோல் கவிதை துளிர்க்க வேண்டும் என்றும் அணிந்துரை மாலையாகப் பிரவகிக்கின்றது. ஒரு கவிதை இன்னும் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

    எனக்கு முன்பாக உறங்காதிருந்த
    பெண்கள் பலரின்
    தசையிழைகளினாலும்
    நரம்புகளினாலும்
    என் உடல் கட்டப்பட்டுள்ளது
    பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
    தானியங்களையே நாம் உண்ணுகிறோம்
    பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம்
    அந்த மண் கொண்டே நாம் நட்டுகிறோம்
    கட்டப்பட்ட வீடு முழுக்க
    ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது்
    உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகின்றேன்
    இத்தனை காலம், இத்தனை பெண்கள்
    உறங்காதிருந்த அத்தனை உறக்கமும்
    நான் உறங்கவே விரும்புகின்றேன்
    சவம் போலொரு யுகாந்திர உறக்கம்

    என்னைத் தழுவட்டும்

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...