28 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...”

.

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“. உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா? கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...” . இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“.  உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா?  கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...