06 அக்டோபர் 2011


மேகங்கள்
---------------------
ஏழைகள் விட்ட
ஏக்கப் பெருமூச்சின் திரட்சி
நிறைவேறாமற்போன
ஆசைகளின் அரூபம்
ஒன்றுபட்டால்தான்
உண்டுவாழ்வு என்பதை
அடிக்கடி மறந்துபோகும்
மட ஜென்மங்கள்
முன்பெல்லாம் இவை
காதலுக்குத்தான்
தூது போயின
இப்பொழுதோ
கண்ணீரையும் சுமந்து கொண்டு
அங்கங்கே
எங்கள் கிராமத்தின்
தோழர்களுக்குத் தூது போகின்றன
கோபம் வந்தால் முகம் கறுத்து
வெடித்துப் புடைக்கும் இவைகள்
முடிவில் உதிர்பபது
கண்ணீரையே!
ஆம்!
எங்கள் தோழர்களின் ஏக்கங்களும்
கண்ணீரில்தானே முடிகின்றன!

-----------------------------------------------
11.10.81 மயன் இதழ் பிரசுரம்
-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...