29 ஆகஸ்ட் 2011

பயணம்

தவறாமல் வருகிறான் ஒருவன்

ஞாயிறன்று அவன்

நம்பிக்கை தளராத

நயமான ஓசை

நீள் தெருவில்

நெடுக மோதி எதிரொலித்து

அதிர்ந்து அலைந்து

மாயமாய் மறைந்து

அழிந்து போகிறது

எல்லோருக்கும் வாழ்க்கை

ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு

தவறாமல் வருகிறான் அவன்

ஞாயிறன்று அவன்

செருப்பூ பழைய செருப்பூ

காலனி ஓசை

கனலாய் கரைய

கலங்கிப்போகிறது நெஞ்சு

இன்னும் அவன்

போகவேண்டிய தொலைவு

எவ்வளவோ?

எப்பொழுது முடியுமோ

அவனின்

இன்றைய பொழுது?

___________________________


 

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...